×

கள்ள காதலை தட்டி கேட்டதால் போலீஸ் வெறிச்செயல் : ம.பியில் மனைவியை தாக்கிய போலீஸ் டி.ஜி.பி பொறுப்பிலிருந்து விடுவிப்பு!!

போபால்: மத்திய பிரதேசத்தில் கள்ள காதலை தட்டி கேட்ட மனைவியை கண்மூடித்தனமாக அடித்து உடைத்த போலீஸ் டி.ஜி.பி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச காவல் துறையில் டி.ஜி.பியாக பணியாற்றி வரும் புருஷோத்தம் ஷர்மா என்பவரே நடவடிக்கைக்கு ஆளானவர். திருமணமாகி 32 ஆண்டுகள் ஆன புருஷோத்தம் ஷர்மாவுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. காதலியின் வீட்டில் இருந்த இவரை கையும் களவுமாக மனைவி பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தம் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவரே மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து வருமான வரித் துறையின் துணை கமிஷனராக உள்ள புருஷோத்தம் ஷர்மாவின் மகன் பார்த், இந்த தாக்குதலின் வீடியோவை மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் சில மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பி, தனது தந்தை மீது புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் புருசோத்தமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா மத்திய பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரே பெண் ஒருவரை கடுமையாக தாக்கியது தவறான வழிகாட்டுதலை தருகிறது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, வன்முறையில் ஈடுட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து புருஷோத்தம் ஷர்மா டி.ஜி.பி, பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tags : Police harassment ,DGP , False love, police, hysteria, MP, wife, DGP, release
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...