×

குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவின் பவமன்புரா பகுதியில் பழைய கட்டிடம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பில் அங்கு நிறுத்தப்படிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

Tags : Gujarat ,Vadodara , Mettur Dam, Cauvery River, 2 male corpses, rescue
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி