சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பலர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகவும் பாதுகாப்பான முறையில் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து, மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி கல்பனாவும் பரிசோதனை செய்துகொண்டனர்.