அமெரிக்காவிடம் 2,290 கோடியில் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ராணுவ தளவாடம் வாங்குதல் கவுன்சில் கூட்டம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவிடமிருந்து 2,290 கோடி மதிப்புக்கு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 780 கோடியில் முன்வரிசை படைவீரருக்கான சிக் சாவர் ரைபிள்களும், 540 கோடியில் வாங்கப்படும் தடையற்ற தகவல் தொடர்புக்கு உதவும் எச்எப் டான்ஸ்-ரெசீவர்களும் குறிப்பிடத்தக்கவை.

Related Stories: