விருதுநகர்: விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் தங்கராஜ் (45) என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை 60 அறைகளுடன் இயங்கி வருகிறது. ஆலையை திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் (40) குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஆலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் கிருஷ்ணகுமார் (50) என்பவர் மருந்துக்கலவையை மிக்ஸிங் செய்தபோது திடீரென ஏற்பட்ட உராய்வினால் வெடி வெடித்து சிதறி பலியானார்.