டெல்லி: தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளிலும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும். தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.