கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதமடைந்தது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயு எடுத்து செல்லும் வகையில் கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேட்டங்குடி கிராமம் வழியே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் சார்பில் லாரி போன்ற வாகனங்களை வயலில் இறக்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.