×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,383-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,30,708- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,306- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, 5,589 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...