சென்னை: பழமையும், பன்முகத் தன்மையும் இந்திய கலாசாரத்தின் அடிநாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 12,000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராயும் ஆய்வுக்குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்கவில்லை. தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின்றி இந்திய வரலாறு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.