சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் மாநில அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.