×

விவசாயிகள் பிரச்னைக்குதொடர்ந்து குரல் கொடுப்போம் :உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தண்டையார்பேட்டை:விவசாய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது:சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். எந்த ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் 1000 பேர் அளவில் கூடுவோம். ஆனால் கொரோனா காலம் என்பதால் 100 பேர் வரை இங்கு கூடியுள்ளோம். கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா என்று தொடங்கப்பட்ட இணையதளம் முழு வரவேற்பு கிடைத்தது.

திமுக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் அதே நேரத்தில் அதிமுகவில் 2 தலைகளுக்குள் யார் முதல்வர் வேட்பாளர் என்று போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள். 2 பேர் இணைந்து யார் முதல்வர் என்று பேசி வருகின்றனர். 2 பேரும் சேர்ந்து பாஜ உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு அடிமையாக இருப்பவர்கள் அவர்கள். எல்லாத்தையும் சிரித்து கொண்டே கூறுவார்கள். விவசாயி பிரச்னை இத்தோடு விட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்.இன்னும் 7 மாத காலம்தான். தோழமை தலைவர்கள் முடிவில் இன்னும் உறுதியுடன், தெம்புடன் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

Tags : Udayanithi Stalin , Farmers, Voice, Udayanidhi Stalin, Speech
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...