சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.