சின்னமனூர்: ஹைவேவிஸ், மேகமலைக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, மகாராஜன் மெட்டு, வெண்ணியார், இரவங்கலாறு உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்களை கொண்ட ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த 5 மாதங்களாக மலைச்சாலை அடைக்கப்பட்டு உள்ளூர்வாசிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த செப்.1 முதல் மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஹைவேவிஸ் மலை பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.