×

39 கண்ணி வெடிகளை அகற்றி பல உயிர்களை காப்பாற்றிய கம்போடியாவைச் சேர்ந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவம்!!!

கம்போடியா : கம்போடியாவைச் சேர்ந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில் பாதுகாப்புகளுக்காக 60 லட்சம் வரை கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். ஆகவே, கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணி வெடிகளை அகற்றி கண்ணி வெடிகள் இல்லாத தேசமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மகவா என்ற எலியை அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய உடலமைப்பைக் கொண்ட ஒருவகை எலி ஆகும். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எலியைக் கொண்டு 39 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர்.

மேலும், வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் மகவா கண்டறிந்துள்ளது. மேலும், இதுவரை 1.41 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் மகவா நிலத்தைத் தோண்டியுள்ளது. எனவே இந்த எலியின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஆண்டிற்கான தங்கப்பதக்கத்தை நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் அமைப்பு மகவாவிற்கு வழங்கியுள்ளது.இந்த அமைப்பு விலங்குகள் ஆர்வலரான மரியா டிக்கினால் தொடங்கப்பட்டு, கடந்த 77 வருடமாக மனிதர்களின் நலனுக்கு சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவம் செய்து வருகிறது. இதுவரை பல நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றிய 34 மோப்ப நாய்கள், 32 புறாக்கள், நான்கு குதிரைகள் மற்றும் ஒரு பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Cambodia , Mankind, Creatures, Ecology, B.D. Eggplant, MK Stalin, insistence...
× RELATED ஆயிரம் லிங்கங்களின் ஆறு