டெல்லி : கோவிட் 19 தொற்றுக்கு எதிராக ஹெர்ட் இம்மியூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவதில் இந்தியா வெகு தொலைவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் பரவும் போது, அதில் இருந்து மக்கள் நிவாரணம் பெறுவதற்கு மந்தை எதிர்ப்பு சக்தி உருவாக்கலாம் என்கிறார்கள் சர்வதேச மருத்துவ நிபுணர்கள். இதற்கான 2 வழிகளில் ஒன்று, தடுப்பு மருந்தை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம்.மற்றொன்று தொற்றை பரவவிட்டு அதன் மூலம் மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும்.