டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் டிராக்டரை தீயிட்டு கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இந்தியா கேட் அருகே காலையில் கூடிய விவசாயிகள் டிராக்டரை சாலையில் கவிழ்த்து தீயிட்டு கொளுத்தினர்.