சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி...!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடக்கத்தை விட அதிகளவில் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தொற்று பாதிப்புக்கு அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபடும் களப்பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மின்சாரத்துறை தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளா பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர்..

இதனையடுத்து,திமுக கட்சியின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: