மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ. போட்டியிடும்: துணை தலைவர் அண்ணாமலை தகவல்

மொடக்குறிச்சி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. போட்டியிடும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி சிறப்பான முறையில் உள்ளது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் பா.ஜ. போட்டியிட்டு வெற்றி பெறும். அது பா.ஜ.வின் நேச்சுரல் தொகுதி ஆகும். மேலும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து மத்திய தலைமைமுடிவெடுக்கும் என்றார்.

Related Stories: