நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரது அத்தை வீடு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. சிறுவன் அடிக்கடி தனது அத்தை வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை மகளான 13 வயது சிறுமியுடன் பழகிவந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தனியாக சந்தித்து பேசிய நிலையில் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பிணி ஆனார். இதையறிந்த இருவீட்டு பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் உறவினர்கள் என்பதால் இருவருக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.