சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா புறப்பட தயாரானது. அதில் அனுப்புவதற்காக வந்திருந்த கூரியர் பார்சல்களை தனியர் விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து, விமானத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் பகுதியில் இருந்து கொல்கத்தா முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சலை ஸ்கேன் செய்தபோது, அதில் அபாயகரமான பொருள் இருப்பதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை தனியே எடுத்து வைத்து ஆய்வு செய்தனர். அந்த பார்சலை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவர் கொல்கத்தாவிற்கு அனுப்பி இருந்தார். அந்த பார்சலில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.