புதுச்சேரி: புதுச்சேரியில் அக்டோபர் 5 முதல் 10,12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 9,11ம் மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.