சென்னை: சென்னையில் OLX இணையதளம் மூலம் செல்போன் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,95,000 மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,95,000 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக விக்னேஷ் என்ற இளைஞர் புகார் அளித்த நிலையில் விசாரணை அடிப்படையில் அரவிந்த் என்பவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.