மதுரை: மதுரை, ராஜாமில் ரோடு பகுதியைச் சேர்ந்த நேரு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நானும், எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஜூலை 7ல் சிகிச்சைக்கு சென்றோம். இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால் சிகிச்சைக்கு முன்பணமாக ரூ.8 லட்சம் செலுத்த கூறினர். நாங்கள் கட்டணம் செலுத்தினோம். ஆனால், கொரோனா பரிசோதனை முடிவில் எங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லையென முடிவு வந்தது. இதனால், முன்பணமாக செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டோம். ஆனால், ரூ.1.05 லட்சம் மட்டுமே கொடுத்தனர். பல முறை முறையிட்டும் தர மறுத்து விட்டனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்ைக எடுக்கவும், எங்களிடம் வசூலித்த முன்பணத்தை திரும்ப தரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.