சென்னை: அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்., மே, மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு டோக்கன் முறையை கடைபிடித்தது. தற்போது தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷனில் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்படும்.வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து டோக்கன் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.