டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய நாடுகளில் ஒன்று என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது என ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கின்றனர். இன்றைய சவால்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளன என கூறினார். ஐ.நா. வரலாற்றில் முதல் முறையாக காணொலி மூலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த கூட்டத்தில் பேசுகிறேன் எனவும் கூறினார். கொரோனாவால் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்படுத்த ஐ.நா. எடத்த தீவரமான நடவடிக்கைகள் என்ன? என ஐநா கூட்டத்தில் பிரதமர் கேள்வி எழுப்பினார். கடந்த 8-9 மாதங்களாக உலகை கொரோனா அச்சுறுத்தி வருகிறது என கூறினார். மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.