ஆந்திரா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 65,794 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 லட்சத்து 97 ஆயிரத்து 294 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.