தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவல் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் ஜூன் 22, 23-ல் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், முருகன் உள்பட 9 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.