இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை தாண்டியது... 93,379 பேர் பலி...குணமானவர்கள் எண்ணிக்கை 48.49 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 93 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 85,362 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,03,932 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,089 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்தது.

.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 93,420 பேர் குணமடைந்துள்ளனர்;

.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 48,49,584 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 96,09,69 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 82.14% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.58% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 16.28% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 13,41,535 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 7,02,69,975 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!

    

மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :273190; குணமடைந்தோர் : 992806 ; இறப்பு :      34761

தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46386; குணமடைந்தோர் :  513836 ; இறப்பு :      9148

    

டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 30867 ; குணமடைந்தோர் : 228436 ; இறப்பு :   5147

கேரளா : சிகிச்சை பெறுவோர் :48967 ; குணமடைந்தோர் :  111331 ; இறப்பு :  635

கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :  98493; குணமடைந்தோர் :  450302 ; இறப்பு :  8417

    

ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 67683; குணமடைந்தோர் : 588169 ; இறப்பு :   5606

Related Stories: