×

ராணுவத்துக்கு முகக்கவசம் வழங்கிய கர்நாடகா சிறுமிக்கு ராஜ்நாத் பாராட்டு

உடுப்பி: கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால், மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு  உள்ளது.  இந்நிலையில், கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், மணிபாலை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி இஷிதா ஆச்சார், ராணுவவீரர்களுக்கு 300க்கும்  மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து அனுப்பினார்.

இதை பாராட்டி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து  மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘‘இந்த பாராட்டு கடிதத்தை இஷிதா எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்,’’ என்றனர்  பெருமிதத்துடன்.



Tags : Rajnath ,Karnataka ,army , Who provided the mask to the army To the Karnataka girl Rajnath compliment
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...