சபரிமலைக்கு புதிய மேல்சாந்தி அக்.17ல் தேர்வு

திருவனந்தபுரம்:  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும், மாளிகைப்புறத்து அம்மன் கோயிலுக்கும், ஆண்டுக்கு ஒருமுறை மேல்சாந்தி தேர்வு நடப்பது  வழக்கம். இப்படி தேர்வு ெசய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டுக்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் செய்வார்கள்.தற்ேபாது பொறுப்பில் உள்ள சபரிமலை மேல்சாந்தி  சுதீர்  நம்பூதிரி, மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன்  நம்பூதிரியின் பதவிக்காலம் முடிய  உள்ளது.

இதையடுத்து, அடுத்த ஓராண்டுக்கான புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் அக்டோபர் 5, 6ம் தேதிகளில்  திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைமையகத்தில்  நடக்கிறது. இதைத் தொடர்ந்து, புதிய மேல்சாந்திக்கான தேர்வு அக்டோபர் 17ம் தேதி சபரிமலை   கோயில் சன்னிதானத்தில் நடக்கிறது.

Related Stories: