அம்பத்தூர்: சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரத்தில் பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.