சென்னை: சென்னை சூளைமேடு ராகவன் தெருவில் ‘ஜங்கரன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இதை செந்தில்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு சீட்டு முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி நிதி நிறுவன இயக்குநர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த நிதி நிறுவனம் சென்னை முழுவதும் செயல்பட்டு வந்துள்ளது.