பெரம்பூர்: சென்னையில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பலத்த இடி இடித்தால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. வியாசர்பாடி சஞ்சய் நகரில் இடி தாக்கியதில் தென்னை மரம் ஒன்று பாதியாக பிளந்தது. அதே பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுதடைந்தன.