மாமல்லபுரம்: கொரோனா காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் அனைத்தும் கடந்த 6 மாதமாக மூடப்பட்டுள்ளன. இதனால், அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வீட்டில் முடங்கியுள்ளனர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.