வெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், பல்வேறு திட்ட பணிகளை  நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது, ஜல்சக்தி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட குளங்கள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படும் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு  பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், மரக்கன்றுகள் வளர்ப்பு முறைகள், காஞ்சிபுரம் அத்திவரதர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அத்திமர  தோட்டம் உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.

மேலும், கரிக்கிலி மற்றும் வேடந்தாங்கல் ஊராட்சிகளிலும் ஆய்வு நடத்தினார். அவருடன்  அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, பிரகாஷ் பாபு, முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் சாமிகண்ணு உள்பட  இருந்தனர்.

Related Stories: