×

மாவா விற்ற வாலிபர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்களை அரைத்து பாக்கெட்,  பாக்கெட்டாக செய்து மீஞ்சூர், எண்ணூர், நாப்பாளையம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக மாவட்ட எஸ்.பி  அரவிந்தனுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இந்நிலையில், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர்.

அப்போது, கொண்டக்கரை பகுதியில் ஒரு வீட்டில் 2 லட்சம் மதிப்புள்ள மாவா பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது  தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் அணில் (31) என்பவரை கைது செய்தனர்.



Tags : Youth arrested for selling mava
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!