சுஷாந்த் சிங் மரண வழக்கு ரியாவுடன் போதைபொருள் தொடர்பாக பேசியுள்ளேன்: நடிகை ரகுல் பிரீத் சிங் ஒப்புதல்

மும்பை; நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும்  போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன்பு ஆஜரான நடிகை ரகுல் பிரீத் சிங்,  நடிகை ரியாவுடன் போதை பொருள் தொடர்பாக பேசியுள்ளேன் என ஒப்புதல்  அளித்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலையில்  போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக  போதைப்பொருள் பயன்படுத்தியது, காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள்  வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபர்த்தி கடந்த 8ம்  தேதி கைது செய்யப்பட்டார். ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்தின் வீட்டு  மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும்  இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில்  தமிழ், இந்தி நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான்,  ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது  தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா  தெரிவித்திருந்தார். இதையடுத்து நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா  படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு  பிரிவினர் கடந்த 2 நாட்களுக்கு சம்மன் அனுப்பினர். நேற்று முன்தினம் ஆஜராக  உத்தரவிட்டிருந்த நிலையில் ரகுல் பிரீத்சிங் வெளியூரில் இருப்பதால்  வெள்ளிகிழமை விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்பட்டது. இதையடுத்து நேற்று  மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல்  ப்ரீத் சிங் ஆஜரானார்.

அப்போது தொடர்ந்து 4மணி நேரம் ரகுலிடம் போதைப்பொருள்  தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர்  கூறுகையில் `` போதை பொருள் தொடர்பாக ரியாவுடன் பேசியுள்ளேன். ஆனால் நான்  போதை பொருள் எதையும் பயன்படுத்தியதில்லை. அதேபோல் போதை பொருள் கும்பலுடன்  எனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து தீபிகா  படுகோனின் மேனேஜர் கரிஷ்மா பிரகாசுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் இன்று தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories: