கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரின் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடியதில் அதிகளவு பணத்தை இழந்துள்ளான். இதனால் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், அவனது தாயார் சஜனை கண்டித்துள்ளார்.