×

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் விபரீதம்!.. கன்னியாகுமரியில் 14 சிறுவன் தற்கொலை.. பெற்றோர் அதிர்ச்சி!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரின் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடியதில் அதிகளவு பணத்தை இழந்துள்ளான். இதனால் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், அவனது தாயார் சஜனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவன் செல்போனை உடைத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி விட்டான். இந்நிலையில் அருகிலுள்ள வாழைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சஜனை உறவினர்கள் திங்கள்சந்தையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் சஜன் உயிரிழந்துவிட்டான். இதனை அறிந்த சஜனின் தயார் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : suicide ,Kanyakumari ,Parents , Online, Rummy, Disaster, Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...