டெல்லி: திரை உலகமும் இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகவும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டன என ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, எஸ்.பி.பி. மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். உடலால் மறைந்தாலும் எஸ்.பி.பி.யின் கானக்குரல் காற்றோடு என்றும் கலந்து இருக்கும் என்று வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.