சென்னை: ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் புகழ் வாழும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அன்னைய்யா எஸ்.பி.பி. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழந்தது எனக்கு வாய்த்த பேறு எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். கொரோனா தொற்றால் எஸ்.பி.பி. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.