×

5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் நெமூரில் 4 செ.மீ மழையும், செஞ்சி, கல்லட்டி, திருமயத்தில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். குளச்சல் முதல் தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை கடல் அலைகள் 3.6 மீட்டர் உயரம் வரை எழும். அதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் மீனவர்களுக்கு அடுத்து 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Chennai Meteorological Center , Rain, Chennai Meteorological Center
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை