×

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சட்ட நகலை எரித்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Marxist ,protests ,Communist Party ,Thiruvarur District ,Thiruthuraipoondi , Thiruvarur, Thiruthuraipoondi, Agrarian Amendment Bill, Marxist Communist, Struggle
× RELATED திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்...