அரியலூர்: அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சின்னக்கடை தெருவில் ஸ்ரீபாலாஜி தங்கநகைக் கடையில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் நுழைந்துள்ளனர். கடையில் இருந்த செயின், தோடு, வளையல் உள்பட 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.