“பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோரின் போஸ்டர்களை சாலைகளில் வையுங்கள்” : முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!!

லக்னோ : பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளின்  புகைப்படங்களை போஸ்டராக அடித்து சாலைகளில் வைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் .உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.மாநிலத்தில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு ஆன்டி ரோமியோ போலீஸ் படையை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இருப்பினும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் ஆபரேசன் துராசாரி என்ற திட்டத்தின் மூலம் ஈவ் டீசிங் செயல்களில் ஈடுபடுவோர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் ஆகியோரை அவமானப்படுத்தும் வகையில், அவர்களது போஸ்டர்களை உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல சாலை சந்திப்புகளில் வைக்கும்படி முதலமைச்சர் யோகி உத்தரவிட்டு உள்ளார்.இதேபோன்று அவர்களுக்கு பின்புலத்தில் பக்கபலம் ஆக செயல்படும் நபர்களையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.இதன் மூலம் அங்கு ஈவ் டீசிங், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: