மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளமான சரவண பொய்கையில் மீன்கள் செத்து மிதக்கின்றன . சரவண பொய்கை குளத்திலிருந்த மீன்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் வைத்து மீன்கள் கொல்லப்பட்டதா?அல்லது ஆக்சிஜன் குறைபாடுகளால் இறந்ததா? எனத் தெரியவில்லை. துர்நாற்றம் வீசுவதால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களை அகற்றப் பக்தர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுதது வருகின்றனர்.