சென்னை : தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின், அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முயற்சிக்கு நான் நன்றி தெரிவிப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும்.