சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு வரும்: கருணாஸ் எம்எல்ஏ கணிப்பு

மதுரை: தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ், தென்மண்டல ஐஜி முருகனிடம் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  25 வருட அரசியல் அனுபவமிக்க சசிகலா, சிறையில் இருந்து வெளியில் வரும்போது, அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். அதிமுகவில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து சொல்ல இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: