சென்னை: 2019 மார்ச் மாதம் நடந்த உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2019 மார்ச் மாதம் உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வேலூரில் மட்டும் 144 அடுத்தடுத்து பதிவு எண்களை கொண்ட நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேபோல், உடல் தகுதி தேர்வுக்கு தேர்வான 5,275 நபர்களில் 1,254 பேர் முறைகேடாக தேர்வானவர்கள் இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.