சென்னை: சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சென்னையில் தினசரி ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 9868 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3097 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.